*உன் வசம்
புரியாத உலகம்
புரியாத தத்துவம்
புரியாத எழுத்து
புரியாத வாழ்வெனப்
புலம்பித் தவியாதே.
மனதை இருத்து
கவனம் செலுத்து
உணர், அனுபவி,
படி,எழுது
புரியும் வரை…
குழம்பாதே,
அறிவுத் தெளிவு பெறு.
புரிந்தால் எல்லாம்
புலப்படும்,
உலக வாழ்வு
உன் வசப்படும்.
*தாய் மொழி
நர்சரியில்
ஆங்கலம் பயிலும்
அந்தக் குழந்தை
அம்மாவிடம் கேட்டது
“தமிழ் எந்த நாட்டின்
தாய் மொழி?”-என்று.
*தனிமை
கூட்டமாய் வாழும்
தென்னையைப் பார்த்து
வெறுப்போடு
புலம்பிய வண்ணம்
ஏரிக் கரையில்
தனித்திருந்த
ஓற்றைப் பனை மரம்.
-ந.க.துறைவனின் “காற்றுக்குப் புரியும்”
என்ற தொகுப்பிலிருந்து.
No comments:
Post a Comment