இயல்பு மீறி…!!
1.
சட்டென வேகமாய்
பறந்த பறவை
ஒற்றை இறகை
உதிர்த்தது கோபமாய்…
2.
நீர் சொட்டும்
குழாயில்
அலகு கொத்தி தாகம்
தணிக்கிறது சிட்டுக்குருவி.
3.
வாத்துகள் நீந்தி
திரியாத
குட்டையில் தவளைகள்,
பாம்புகள்
எதிர் எதிர் முனையில்..
4.
தவளைகள் சத்தம்
அடங்கியது
மழை நின்ற இரவு.
5.
மழை நின்று
வானம் வெளுத்தது
உயிரினங்கள்
இரை தேடி வெளியில்…
6.
காக்கைகள் எப்பொழுதும்
குழப்பத்தில் இருந்து
தான்
அலைகிறதாம்
ஒற்றைக் கண்
பார்வையோடு…!!
7.
காப்பி அடித்தல்
எத்தனையோ தருகிறது
அகராதி.
8.
கழுதையும் குத
No comments:
Post a Comment