விடியல்
ஒளி பிறந்தது…!!
தைப்
பொங்கல் பிறந்தது
மகிழ்ச்சி
பொங்கி வழிந்து
புதிய
ஆடைகள் வந்தது
குழந்தைகள்
குலுங்கி சிரித்தது
போகியில்
குப்பை எரிந்தது
மேளம்
சத்தம் அதிர்ந்தது
துள்ளித்
துள்ளி ஆட்டம் போட்டு
சிறுவர்கள்
கூட்டம மகிழ்ந்தது.
உழவர்
திருநாள் உதித்தது
உழைப்பின்
பெருமை தெரிந்தது
நெல்
மணிகள் அசைந்தது – புதிய
பானையில்
பொங்கி வழிந்தது.
மாடு
கன்று குளித்தது
ஆவாரம்
மாலை அணிந்தது
கரும்பு
கெடை நின்றது
உள்ளம்
களித்து மிதந்தது.
இல்லம்
எல்லாம் மணந்தது
பொங்கல்
சோறு ருசித்தது
உறவுகள்
ஒன்று சேர்ந்தது
உற்சாகம்
பொங்கி மலர்ந்தது.
மரம்
செடிகொடிகள் பூத்தது
காடு
மலைகள் ஜொலித்தது
நாட்டு
மக்கள் முகத்திலே - புதிய
விடியல்
ஒளி பிறந்தது!!
*
ReplyDeleteநான்கு கால் செல்வங்களுக்கு
நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
தைப்பொங்கல் வாழ்த்துகள்!