இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு விவசாய உற்பத்தியில்
சாதனைப் படைத்துள்ள பூங்கோதை தமிழ்நாட்டுப் பெண்மணி ” கிரிஷி கர்மான் விருது பெற்றுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதாமர் மோடி, அந்த விருதை வழங்கினார். இரண்டு லட்சம்
ரூபாய் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது.
“ பெண்களால் முடியாதது எதுவுமில்லை. விடாமுயற்சியும்
கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் இருந்தால் யாரும் சாதனை படைக்கலாம். நான் வீட்ல இருந்ததைவிட
வயல்ல இருந்ததுதான் அதிகம். காலைல ஆறுமணிக்கு வயலுக்குப் போனா பொழுதுசாஞ்ச பிறகுதான்
வீட்க்கு வருவேன். மக்காசோள உற்பத்தியில் சாதனை படைச்ச என் வயல்ல கடந்த ரெண்டு வருஷமா
விளைச்சல் இல்லை. போன வருஷம் மழை அதிகமாக பெய்து பயிர்களை அழிச்சிடுச்சி. இந்த வருஷம்
மழையும் இல்லை.கிணத்துலே தண்ணியும் இல்லை. அதனால பயிர் எல்லாம் கருகிப்போச்சு. அதுக்காக
நான் இடிஞ்சி போயிடலை, விவசாயிங்க பாடுபட்டாதானே நகரத்துல இருக்கிறவங்க வீட்லயும் அடுப்பு
எரியும்? இவ்ளோ நாளா என்னை வாழவைச்ச இயற்கை, இடையிலே கொஞ்சம் சோதிச்சுப் பார்க்குது.
ஆனா என்னைக் கைவிடாதுங்கற நம்பிக்கையில காத்துக்கிட்டு
இருக்கேன் ” என்கிறார் விவசாயி பூங்கோதை
ஆதாரம் ; தி இந்து – ஞாயிறு நாளிதழ் – பெண்
இன்று - 29-01-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
பெருமைமிக்க பூங்கோதை
ReplyDeleteபதிவாக்கி அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Fisit my blog. please sir
ReplyDeleteAnd follow my google+ acount
thank you