*
1. உலகின் மிகப் பெரிய வர்த்தக நிறுவனமான
“ அமேசான் ” அதன் கனடா நாட்டுப் பிரிவு இந்தியாவின் தேசியக் கொடியில் இடம் பெற்றுள்ள
மூவர்ண நிறத்தில் கால்மிதியடிகளைத் தயாரித்தற்காகக் கடுமையாக எச்சரிக்கபட்டு, மன்னிப்புக்
கேட்க வைக்கப்பட்டது.
இந்தியாவில்
யோகா குரு பாபா ராம்தேவ் நடத்தும் பதஞ்சலி நிறுவனம் கூட பதஞ்சலியின் பெயரில் கால்மிதியடிகளைத்
தயாரித்து விற்பனை செய்கின்றன என்கிறார்களே உண்மையா? அதற்கென்ன செய்யப் போகிறது இந்திய
அரசு.
2. கம்பளா போட்டிக்கு அவசர சட்டம். கர்நாடக
முதல்வர் சித்தராமையா முடீவு.
மற்ற
மாநிலங்களிலும் இதுபோன்ற போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அவர்களும் போராட்டக்களத்திற்கு
விரைவில் இறங்குவார்கள் போல தெரிகின்றது.
3. பேமெண்ட் வங்கி தொடங்க தபால்துறைக்கு ரிசர்வ்
வங்கி அனுமதி.
ஆதித்யா
பிர்லா நுவோ, பினோ பெடெக், எஸ்எஸ்டிஎல், ரிலையனஸ், வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு கொள்கை
அளவிலான அனுமதி கிடைத்திரு்க்கிறது.
எல்லாமே
தனியார்துறைக்கு தாராளமாக அனுமதிக்கபட்டுள்ளது.
தபால்துறையை இன்னும் கொஞ்சநாளில் ஊத்தி மூடிவிடுவார்கள்
போல தெரிகிறது.
ஆதாரம்
jதி இந்து – நாளிதழ் – 29-01-2017.
தகவல் ; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment