சூபி கதை.
“ ஞானத்தைத் தேடும் ஒருவர், லுக்மான் எனும் சூபி குருவிடம் கேட்டார்
“ நீங்கள் யாரிடம் ஞானத்தைப் பெற்றுக் கொண்டீர்கள்? ”
அவர் சற்றும் யோசிக்காமல் பதில் சொன்னார்
“ பார்வையற்ற ஒருவரிடமிருந்து. பார்வையற்ற எவரும் முன்கூட்டியே
கவனிக்காமல் ஒரு அடி முன்னால் வைப்பதில்லை. அவர்கள் எங்கும் விழுவதில்லை. பெரும்பாலும்,
கண்ணுள்ளவர்கள் தான் விழுகிறார்கள். அதையறிந்த போது என் கவனம் அதிகரித்தது. வழியும்
தெரிந்தது ”.
ஆதாரம் ; சூபி கதைகள் – தமிழில் : யூமா வாசுகி. பக்கம் – 31.
தகவல் ; ந.க.துறைவன்.
No comments:
Post a Comment