Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Friday 11 December 2015

மழை...மழை... எங்கே பிழை...?? ( புதுக்கவிதை )


*
இனிய குரல் கொடுத்து எனை
அழைக்கும் சிநேகிதர்களைப்
பார்த்துப் இருபது நாள்களாயிற்று.
மழைவெள்ளப் பெருக்கின்போது
எங்கே போயிருந்தன?
அந்தமனப் பறவைகள்.
வெள்ளநீர் பார்வையிடப் போயிருந்ததா?
அணைகள் ஏரிகள் உடைப்புப் பார்த்து
ஆத்திரம் கொண்டு சிலிர்த்ததா?
விளைநிலங்களைப் பார்த்து அழுததா?
வாழ்நாளில் சேகரித்தப் பொருள்கள்
வாரிச்சுருட்டிப் போன அவலத்தைப்
பார்த்துக் கதறியழுததா?
கோரமுகங்காட்டியப் பேயாய் பாய்ந்து
மனிதஉயிர்களைப் பலிகொண்டதைப்
பார்த்து பதறித் துடித்ததா?
உணவின்றி நீரின்றி உறக்கமின்றி
அல்லல்பட்டவர்களைப் பார்த்து
ஆவேசப்பட்டதா?
மின்சாரமின்றி போக்குவரத்தின்றி
வீட்டுச் சிறையிலிருந்த மனிதங்களின்
இருட்டில் வாடிய முகங்களைப் பார்த்துக்
கண்ணீர் வடித்ததா?
நிவாரணப் பணியில் இயங்கும் சமூகத்
தொண்டர்களின் செயல்களின்
அர்ப்பணிப்புப் பாராட்டி உதவிக்கு துணை நின்றதா?
இன்னும் இயல்பு திரும்பாதா? என
ஏங்கித் தவிக்கும் மனிதக் கவலைகளை
எண்ணி ஆறுதல் சொல்லித் திரிந்ததா?
எப்பொழுதேனும் மகிழ்ச்சி தரும் நீர்த்துளிகள்
இப்பொழுது மட்டும் ஏனிந்த கோரமுகம்.
காட்டி பயமுறுத்தி விட்டது இப்பெருமழை….!!

1 comment:

  1. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    ReplyDelete