*
முல்லா ஒரு முறை அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனைக்குச்
சென்றிருந்தார்.. அவருக்கு அறவை சிகிச்சை செய்யும் மருத்துவர் மிகவும் பரபரப்பாகக்
காணப்பட்டார்.
“ இங்கே பாருங்க முல்லா! நாங்கள் வேகத்தை நம்புகிறோம். ஒரு நொடிப்பொழுதைக்கூட
வீணாக்க மாட்டோம். அறுவை சிகிக்சை முடிந்த அடுத்த நாளே நீ்ங்கள் உங்கள் அறையில் ஐந்து
நிமிடங்கள் நடக்க வேண்டும். அடுத்த நாள் மருத்துவமனைக்கு வெளியே அரைமணி நேரம் நடக்க
வேண்டும். மூன்றாவது நாள் ஒரு மணிநேரம் தெருவில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இங்கே
நேரம் தான் பணம். நமக்கு இருப்பதோ குறுகிய வாழ்நாள். அதனால் பணத்தையும் நேரத்தையும்
எவ்வளவு முடியுமோ? அவ்வளவு மிச்சப்படுத்த வேண்டும். என்ன புரிந்ததா? ஏதாவது சந்தேகம்
இருக்கிறதா? ”
“ ஓரே ஒரு சந்தேகம் டாக்டர். அறுவை சிகிச்சை செய்யும் போதாவது
நான் படுத்துக் கொள்ளலாம் அல்லவா? ”
ஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியா இருந்தால்…. – என்ற நூல் – பக்கம்
– 400.
தகவல் ; ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment