Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Sunday, 15 November 2015

மனப் புயல்...!! ( கட்டுரை )


*
புயல் மழை கொட்டிக் கொண்டிருக்கிறது. கரைகடந்தப் புயலினால் வயல்வெளிகள் உருக்குலைந்து விட்டன. . வீடு வாசல்கள் இழந்து மனித உயிர்கள் வாழ்வை இழந்து வெறுங்கையர்களாய் நிற்க வைத்துவிட்டது. வெள்ளம். எங்கும் பெருவெள்ளம். கரைபுரண்டு ஓடும் தண்ணீர் வெள்ளம். மக்கள் முகங்களில் தெம்பும் துயரமும் காணப்படுகின்றன. எத்தனையோ ஆண்டுகள் நீரைக்காணாத ஆறுகள் ஏரிகள் அணைகள் குளம் குட்டைகள் எல்லாம் நீர் நிரம்பி வழிகின்றன.

பனிரெண்டு ஆண்டுக்கொருமுறை வரும் மகாமகத் திருவிழா போன்று, ஆற்றங்கரையில் நின்று மக்கள் கூட்டம் குடும்பம் குடும்பமாய் வெள்ளத்தை வேடிக்கைப் பார்க்கிறது. கரையில் ஈரமண் மேட்டில் நின்றிருந்த இரு சகோதரர்கள் கண்ணிமைக்காமல் பார்த்து நின்றிருந்தத் தருணம் மண்சரிந்தது. இருவரும் தடுமாறி கீழே சாய்ந்தனர். சமாளித்தனர். உம்… ஏதும் முடியவில்லை. நீரில் தலைகவிழ்ந்தது தான் தாமதம் வெள்ளநீர் இருவரையும் வேகமாய் இழுத்துக் கொண்டது. கரையில் வேடிக்கைப் பார்த்து நின்றிருந்த மக்கள் செய்வதறியாது தவித்தனர். இருவர் உடல்களும் வேகவேகமாக அடித்துச் செல்லப்படுகிறது. எல்லாரும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு வழிதெரியாமல் திகைத்து நின்று, கதறி கதறி காப்பத்துங்க… காப்பாத்துங்க.. என்ற அழுகுரலின் ஓலங்கள் எங்கும் எதிரொலித்தன. அச்சிறுவர்களின் உடல்களை நீர்ச்சுழற்சி இன்னும் வேகவேக இழுத்துச் செல்வதைப் பார்க்கப் பார்க்க வேதனை தாங்கமுடியவில்லை. எத்தனை நொடி? எத்தனை நிமிடமிருக்கும்?. அத்தனை துரிதமான அச்சம்பவம் நடந்து முடிந்து விட்டது. இப்பொழுது அவ்வுடல்கள் கண்ணுக்குக் கூட தெரியவில்லை. அவ்வுடல்கள் எங்கேனும் கரை ஒதுங்கியிருக்குமா? எவரேனும் பார்த்துக் காப்பாற்றியிருப்பார்களா? வெள்ளநீரில் இன்னும் எங்கேனும் மிதந்துப் போய்க் கொண்டிருக்குமா? 

அச்சிறுவர்களின் விதி நீரின் விளையாட்டாய் முடிந்து விட்டது.  பெற்றவர்கள் இன்னும் கரையைவிட்டு அகலவில்லை. அவர்கள் அழுது சிந்தும் கண்ணீர்மழை வெள்ளநீரில் கலந்து பாய்கிறது. இன்னும் மழை தொடர்ந்து பெய்துக் கொண்டுதானிருக்கிறது. புயல் கரையைக் கடந்துவிடும். ஆனால் எவர் ஆறுதலும் தேறுதலும் சொன்னாலும் நிவாரணம் கொடுத்தாலும் அவர்களின்  பாசம் கரைகடந்துவிடுமா? வாழ்வில் நிம்மதிதான் கிட்டிவிடுமா?  

*

No comments:

Post a Comment