*
காற்றழுத்தத் தாழ்வு
மண்டலம்
புயலாக மாறி வந்தது
கண்ணம்மா.
கனமழை பெய்து புரண்டு
ஊரெங்கும்
வெள்ளமாக பாயுதடி
கண்ணம்மா.
*
கடைகண்ணி போய்வர
முடியலை
மருத்துவமனை நாட
முடியலை கண்ணம்மா
டெங்கு மலேரியா
நோய் கொடுமை
எங்கும் தாண்டவமாடுதடி
கண்ணம்மா.
*
நெற்பயிர்கள் தலைசாய்த்து
நீரில்
நீச்சலடித்து மிதக்குதடி
கண்ணம்மா.
வாழைமரம் குலையோடு
தலைசாய்ந்து
வாழ்வை இழந்து
தவிக்குதடி கண்ணம்மா.
*
வீடு இழந்து உழைப்பு
இழந்து மக்கள்
காசு தேட வழியில்லை
கண்ணம்மா
ஏரி குளம் உடைப்பெடுத்து
வெள்ளநீரு
ஊருக்குள்ளே பாயுதடி
கண்ணம்மா
*
பட்டமரம் போலாகி
அல்லல்படும்
வாழ்க்கையாச்சுதடி
கண்ணம்மா - இந்தப்
பரிதாப நிலைமைப்
பார்க்க யாரும்
பறந்துவர நேரமில்லையடி
கண்ணம்மா??.
*
No comments:
Post a Comment