*
தாழ்வு மனப்பான்மை…!!
*
ஒரு முறை முல்லா நசிருதீன் என்னிடம் வந்தார். அவர் மிகவும் பரபரப்பாகக்
காணப்பட்டார்.
“ என்ன ஆயிற்று? ” என்று கேட்டேன்.
“ நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். சமீப காலமாக எனக்குப் பயங்கரமான
தாழ்வுமனப்பான்மை வந்துவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள்தான் எப்படியாவது…
”.
அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு
என்ன காரணம்? ”
“ நான்தான் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்தவன் என்று எனக்கு நன்றாகவே
தெரியும். ஆனால் சமீபகாலமாக மற்றவர்களும் எனக்குச் சமமாகத்தான் இருக்கிறார்கள். என்ற
உணர்வு வருகிறது. இந்தத் தாழ்வு மனப்பான்மையில் மாட்டிக் கொண்டு தவியாகத் தவிக்கிறேன்.
நான் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்று எனக்குப் புரிய வைத்து, இந்தத்
தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்.
ஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்… ” – என்ற நூல் –
பக்கம் – 214.
தகவல் ; ந.க.துறைவன்
*
No comments:
Post a Comment