கட்டுரை.
*
புயல் மழை வருவதை
முன்னறியும் ஆற்றல் பறவைகள் விலங்குகளுக்கு உண்டு என்று சான்றோர்கள் சொல்கிறார்கள்.
இன்றும் ஆதிவாசி பழங்குடிமக்கள் வானிலையை அறி்ந்து மழை வருவதைச் முன்கூடடியே சொல்வதைக்
கேள்விப்பட்டிருக்கிறேன். அக்காலத்திலும் இக்காலத்திலும் ஜோதிடர்கள் பஞ்சாங்கம் பார்த்து அப்படி சொல்வதை
அறிவேன். நவீன விஞ்ஞான வளர்ச்சியடைந்த இந்நாளில் வானிலை ஆராய்ச்சி மையம் மிகத் துள்ளியமாக
உடனுக்குடன் தகவல்களை அனுப்பி மக்களை எச்சரிக்கை செய்கின்ற அளவிற்கு வளர்ந்திருக்கின்றன.
பத்து பதினைந்து
ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் பெய்து வரும் புயல்மழை வெள்ளப் பெருக்கு மக்கள் வாழ்வாதாரத்தையே
புரட்டிப் போட்டுவிட்டது. எங்கும் மழைவெள்ள நீர் பெருகிப் பாய்கிறது. அணைகள், அருவிகள்,
ஆறுகள், ஏரிகள், குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. பல இடங்களில் உடைப்பு
ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்ப்பட்டுள்ளன. விவசாயம் விவசாயிகள் வாழ்விழந்து தவிக்கின்றார்கள்.
அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின்மையால்
பாதுகாப்பின்றி அவதிக்குள்ளாகி உள்ளார்கள். அவர்களுக்கான நிவாரண உதவிகள் மிகத் தாமதமாகி
விட்டன என்று புகார் தெரி்க்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு
முன்னர் ஒடிசாவில் ஏற்பட்ட புயல் மழைக்கு அம்மாநில முதல்வர் எடுத்த முன்னெச்சரிக்கை
நடவடிக்கை இன்றளவும் உலக அளவில் பாராட்டப்படுகின்றன. அந்நிகழ்விலிருந்து இன்னும் பல
மாநிலங்கள் தக்கதொரு படப்பினைப் பெறவில்லை என்று சமூக ஆர்வலர்கள் விமர்சகர்கள் காட்டமாகத்
தெரிவிக்கிறார்கள். இந்தியா மாநிலங்களில் தமிழகம் என்னதான் வளர்ச்சிப் பெற்ற மாநிலமாக
இருந்தாலும் அரசியல்ரீதியாக மக்கள் பிரச்சினைகள்பால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைள்
பாரபட்சமானதாகவே இருக்கின்றன என்று அரசியல்வாதிகள் முதல் பொருளாதார வல்லுநர்கள் வரை
தெளிவாக எடுத்துரைத்துள்ளார்கள். இன்று தமிழக மக்கள் பெரும் அதிருப்திக்கு ஆளாகியுள்ளார்கள்
என்பது நிதர்சனமான உண்மையென்று சொன்னால் மிகையாகாது.
*
No comments:
Post a Comment