*
நிலையில்லை என்றபோதும்
தற்காலிக
ஆறுதல் தருகின்றன
சில உரையாடல்கள்.
முரண்பட்டாலும்
தவிப்பிலிருந்து மீட்டெடுக்கின்றன
சில உறவுகள்.
நகர்ந்துவிடும் என்றபோதும்
இதம் தருகின்றன துயரநாள்களில்
சில நினைவுகள்.
திரும்பப் பெறமுடியாத
நேற்று
தடுத்து நிறுத்த முடியாத
இன்று
தவிர்க்கவே இயலாத
நாளை
ஊடுபாவி ஓடுகிறது
இவற்றோடு காலம்.
ஆதாரம் : ஒளிச்சிறை - இரா. தமிழரசி – கவிதைநூல் – பக்கம்.
66
தகவல் ; ந.க.துறைவன்,
*
சிறந்த பாவரிகள்
ReplyDeleteதொடருங்கள்