Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Monday 31 October 2016

ஹைக்கூ விமர்சனம்...!!



தஞ்சை அரசூரியிலிருந்து நண்பர் விச்சுவின் அன்பு கடிதம்.

ந.விச்வநாதன்.                       அரசூர், அம்மன்பேட்டை,
                                     தஞ்சாவூர் – 613 205.
                                     தேதி : 12- 02- 2012.


அன்பு நண்பருக்கு நலமே விளைக. வணக்கம்

தாங்கள் அன்புடன் அனுப்பிய “ சொல் கொண்ட மேகங்கள் ” நூல் பெற்றேன். நன்றி. சிறப்பான முயற்சி. வாழ்த்துக்கள். எல்லா கட்டுரைகளையும் வாசித்து முடித்த பிறகு மனதுக்கு திருப்தியாக இருந்தது.
தற்காலத்தில் ஹைக்கூ என்ற பெயரில் ஏராளமாய் சத்தற்ற விஷயங்களாக வந்து கொண்டிருக்கின்றன. ஹைக்கூ பற்றிய புரிதல் மிகக் குறைவாகவே இருக்கிறது. அசல் ஹைக்கூவிற்கு அருகில் கூட வரத்தக்கவையாய் இல்லை. ஆரவாரம் மிகவாகவே இருக்கிறது.

சொல் கொண்ட மேகங்கள் வழி நீங்கள் உண்மையான அக்கரையோடு ஹைக்கூ தளத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர முடிந்தது. ‘ எந்த முடிவும் எட்டாமல் / முற்றுப் பெற்றது / மூவருக்குள் நடந்த விவாதம் ‘ என்பது அருமைதான். இதுதான் சரியான பார்வை.

ஹைக்கூ குறித்த உங்கள் பார்வை தெளிவாகவே இருக்கிறது. ஜென் குறித்த உங்கள் அனுபவங்கள் மிகச் சிறப்பானவை. ஜென் புரிதல் என்பது ஹைக்கூவைப் புரிந்து கொள்ளல்தான். கீழைநாடுகளின் கலாச்சாரத்தன்மையும் தமிழகச் சூழலும் கிட்டத்தட்ட ஒன்றுதான். பருவகாலங்கள் வாழ்வியல் நெறிகளும் கூடத்தான். ஆயினும் பலருக்கு ஹை்கூ சித்திப்பதில்லை. உங்களுக்கு அது வந்திருக்கிறது. என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் நிறைய எழுதுங்கள். உங்களால் முடியும்.

அன்பாதவனின் பார்வை வித்தியாசமானது. சிறுவர்களுக்கான இலக்கியமே அருகிப் போன காலத்தில் அதில் நீங்கள் முனைந்திருப்பது வரவேற்கத்தக்கது.

நான் ஒரு சரியான கிராமத்தில் வசிக்கிறேன். புத்தகம் தேடிப் போக நீண்ட பயணம் தேவைப்படுகிறது. எனவே கிடைக்கும் புத்தகங்களிலேயே என் கவனம் செல்கிறது. புதிய வரவுகள் எனக்கு தாமதமாகவே தெரிகின்றன. தொடர்ந்து வாசிக்க முடியாதச் சூழல். நிறைய ஹைக்கூ நூல்கள் நான் வாசிக்கவில்லை. இப்போது விரிவான ஒரு கட்டுரை ஜென் குறித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். எனவே புத்தகங்களைத் தேடிப் போக வேண்டிய அவசியம். என் முள்ளில் அமரும் பனித்துளிகள் குறித்த பார்வை நன்றாகவே இருக்கிறது. நன்றி.
மீண்டும் வருவேன்.

நட்புடன்

நா.விச்வநாதன்.

*

No comments:

Post a Comment