*
எல்லோரிடமும்
உண்டு தனித்துவம்
அதுவே
அவரவர் மனத்துவம்
*
பிடிவாதம்
என்பது அகம்பாவம்
விட்டுக்
கொடுப்பது தனிசுபாவம்
*
வெளிமனம்
வசீகரம்
உள்மனம்
வக்கிரம்.
*
வாக்கு
கொடுப்பது எளிது
வாக்கு
காப்பாற்றுவது கடினம்.
*
எதிர்ப்பிலேயே
வாழ்பவனுக்கு
எதிரிகளின்
செயல்கள் தூசு.
*
கவிஞர்க்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மற்றும் கவிஞரின் அன்பு நண்பர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!
ReplyDelete