*
அஸ்தியை
கடல் நீரில் – உள்
அமுக்கியதும்
மேலெழுந்து
மிதந்து மிதந்து
முன்னும் பின்னும்
அலைகளில்
அலைகழிந்து
மெல்ல மெல்ல
கரையத் தொடங்கியது
அந்த
அஸ்தியின் வாசம்
பிடிக்காமலோ
என்னவோ
விலகி விலகி
ஓடின மீன்கள்!
*
No comments:
Post a Comment