இந்திய
இலங்கைக் கடல் நடுவிலே
இருப்பது
எங்கள் கச்சத்தீவு
இயற்கை
அழகு எழில் கொஞ்சும்
இந்தியச்
சொத்துக் கச்சத்தீவு.
இந்திய
மீனவர் மீன் பிடிக்கவும்
வலைகள்
உலர்த்தி ஓய்வெடுக்கவும்
கடல்
அன்னையைத் தொழுது வணங்கவும்
உரிமை
யுள்ளது கச்சத்தீவு
எல்லை
மீறா எங்கள் மீனவர்க்குத்
தொல்லைக்
கொடுக்கும் சிங்கள ராணுவம்
துப்பாக்கி
முனையில் நாளும் மி(வி)ரட்டியே
அப்பாவிகளைச்
சுட்டுக் கொல்வதோ?
பரஸ்பர
ஒப்பந்த நெறிமுறையினை
பண்புடன்
மதியா இனவெறிய(ர்)ன்
பக்சே
கும்பல் அத்துமீறிக் கச்சத்தீவில்
ஆதிக்கம்
புரிவது பெரும் ஆணவமே
அன்னிய
நாடுகள் தீவில் புகுந்து
கண்காணிப்பு
பணியினை செய்வதோ?
தீவின்
பசுமைப் பரப்பைக் கையகப் படுத்தி
தீவிர
ராணுவத் தளங்களை நிறுவுவதோ?
இந்திய
இறையாண்மைக் கெதிரான
எதிர்வினைச்
செயல்களை முறியடிப்போம்
வளமான
எம்மண் கச்சத்தீவை – இன்று
உளமாற
மீட்பதொன்றே உரியத் தீர்வாம்!
No comments:
Post a Comment