முரண்பாடுகளால்
மனதிற்குள்
மௌனமாக
முளைத்து
வளர்கிறது
மனஸ்தாபம்
பணம்
கொடுக்கல்வாங்கல்
பரிமாற்றத்தாலோ!
பூடகமாய்ப்
பேச்சில்
தெறிக்கும்
உஷ்ணத்தினாலோ
அணுகுமுறையில்
வெளிப்படும்
வித்தியாசத்தினாலோ
அவரவர்களுக்குள்
மனஸ்தாபம்
உண்டாகி
மனம்
முறிந்து
வளர்கிறது
பகைமை.
மனஸ்தாபம்
கொண்டவர்களைப்பார்த்து
மற்றவர்கள்
புன்சிரிப்புடன்
இன்னொருவருடன்
பகிர்ந்துகொள்வார்கள்
ரகசியமாய்.
மனஸ்தாபம்
மண்புற்றாய்
வளர்வதால்
மனம்
குழம்பித் தடுமாறி
கனல்கிறது
நெஞ்சில்
வெறுப்பின்
நெருப்பு
மனஸ்தாபம்
கொண்டு
விலகியவர்க்குச்
சமாதானமாய்
பலரும்
காட்டுவர்
அனுதாபம்
பலவிதமாய்.
No comments:
Post a Comment