கனிந்திருக்கிறது
முலை
முனையில்
கருந்திராட்சை.
சின்ன முலை
பெரிய முலை
சரிந்த முலை
சாய்ந்த முலை
நிமிர்ந்த முலை
அம்சமாய்
பால் சுரக்காத
நாயுடுஹால் முலை.
யோனிகள் பற்றி
முலைகள் பற்றி
முனைப்புடன்
கவிதை முழங்கிய
கவிஞர்கள் எல்லாம்
இப்பொழுது
முழங்குவதை நிறுத்தி
முடங்கிப்போய்விட்டார்கள்
அவர்களிடம்
வற்றிவிட்டது பால்
மறந்து விட்டது குழந்தை.
மூலஸ்தானத்தில்
சிலையாய் நின்று
பக்தர்களுக்கு
அருள் பாலிக்கிறாள்
திருவண்ணாமலையில்
அண்ணாமலையின்
அருகில்
அம்மை
உண்ணாமுலை
முலை
முனையில்
கருந்திராட்சை.
சின்ன முலை
பெரிய முலை
சரிந்த முலை
சாய்ந்த முலை
நிமிர்ந்த முலை
அம்சமாய்
பால் சுரக்காத
நாயுடுஹால் முலை.
யோனிகள் பற்றி
முலைகள் பற்றி
முனைப்புடன்
கவிதை முழங்கிய
கவிஞர்கள் எல்லாம்
இப்பொழுது
முழங்குவதை நிறுத்தி
முடங்கிப்போய்விட்டார்கள்
அவர்களிடம்
வற்றிவிட்டது பால்
மறந்து விட்டது குழந்தை.
மூலஸ்தானத்தில்
சிலையாய் நின்று
பக்தர்களுக்கு
அருள் பாலிக்கிறாள்
திருவண்ணாமலையில்
அண்ணாமலையின்
அருகில்
அம்மை
உண்ணாமுலை
No comments:
Post a Comment