இயற்கையின் அற்புதம்
விலங்குகள் உணர்ந்துள்ளன
அருவிச் சாரலின் குளுமை.
மழைக்கு ரொம்ப பிடிக்குமாம்
குன்னக்குடியின்
அமிர்தவர்ஷிணி ராகம்
சுவாமிக்கு களைப்பு
வியர்க்கிற தென்று
வீசுகின்றனர் சாமரம்
தேர்ந்த கற்களையே
கனவு காண்கிறது
சிற்பியின் மனம்
எப்பொழுது பார்க்க வாய்க்குமோ
ஸ்ரீவில்லிப் புத்தூர்
அணில் சரணாலயம்
அந்த ஓவியம் பார்க்க பார்க்க
எத்தனை அர்த்தம் வெளிப்படுத்துகிறது?
ஓவியர் பாஸ்கரனின் பூனை.
புயல் வருகிறதே யென்று
துக்கப்படுவதில்லை
தும்பைப் பூக்கள்
படித்துக்கொண்டிருந்தேன்
புத்தகத்தின் மீது விழுந்தது
மனைவி முகத்தின் நிழல்
முதலைகள் எதுவுமில்லை
பாதுகாப்பான கோட்டை
அகழியில் படகு சவாரி
விளையாட்டுப் பொருளாய்
குழந்தையின் கையில்
மயிலிறகு விசிறி
வயல்வெளிகளில்
எங்கும் கிணறுகள் இல்லை
நீச்சல் பழக
விலங்குகள் உணர்ந்துள்ளன
அருவிச் சாரலின் குளுமை.
மழைக்கு ரொம்ப பிடிக்குமாம்
குன்னக்குடியின்
அமிர்தவர்ஷிணி ராகம்
சுவாமிக்கு களைப்பு
வியர்க்கிற தென்று
வீசுகின்றனர் சாமரம்
தேர்ந்த கற்களையே
கனவு காண்கிறது
சிற்பியின் மனம்
எப்பொழுது பார்க்க வாய்க்குமோ
ஸ்ரீவில்லிப் புத்தூர்
அணில் சரணாலயம்
அந்த ஓவியம் பார்க்க பார்க்க
எத்தனை அர்த்தம் வெளிப்படுத்துகிறது?
ஓவியர் பாஸ்கரனின் பூனை.
புயல் வருகிறதே யென்று
துக்கப்படுவதில்லை
தும்பைப் பூக்கள்
படித்துக்கொண்டிருந்தேன்
புத்தகத்தின் மீது விழுந்தது
மனைவி முகத்தின் நிழல்
முதலைகள் எதுவுமில்லை
பாதுகாப்பான கோட்டை
அகழியில் படகு சவாரி
விளையாட்டுப் பொருளாய்
குழந்தையின் கையில்
மயிலிறகு விசிறி
வயல்வெளிகளில்
எங்கும் கிணறுகள் இல்லை
நீச்சல் பழக
No comments:
Post a Comment