ஈழத்தமிழர்த்
தலைவனின்
வேழ
முகத்து புதல்வனே
தமிழ்
இளஞ்சிங்கமே
தம்பி
பாலா!
கற்கும்
பள்ளி வயதில் – நீ
குற்றம்
ஏதும் செய்திடலையே
அப்பாவிக்
குட்டிப் பாலகனே
தம்பி
பாலா!
கருணையற்ற
கொலை வெறியர்
துப்பாக்கிக்
குண்டுக் கிரையாகி
உயிர்
துறந்த இளங்கன்றே
தம்பி
பாலா!
கண்களிலே
கனவுத் தேக்கி-ஈழ
மண்ணை
மீட்பதற்காய் என்ன
திட்டங்கள்
வைத்திருந்தாய்
தம்பி
பாலா!
நேசித்த
உலகத் தமிழரெல்லாம்
வசித்த
பூமியில் உறங்கும்
உனக்காக
அஞ்சலி செய்கிறது
தம்பி
பாலா!
கனவுகள்
வெல்லும் பாலா
காட்சிகள்
மாறும் பாலா-நாளை
மலரும்
ஈழ மண்ணில் நீடுழி
வாழ்வாய்
தம்பி பாலா!!
No comments:
Post a Comment