கவிதைக்கு
மரம் தெரியாதுகடலுக்குப்
பூமிதெரியாது
மலைக்கு
விண்ணைத் தெரியாது
உயிருக்கு
உடலைத்தெரியாது
மனத்திற்கு
ஆன்மா தெரியாது
எதற்கும் எதுவும்
தெரியாமல் இயங்குவதோ
வாழ்வின் ரகசியம்
பலரின் பொழுதுபோக்கு
வம்பளப்பு
யாரும்; யாருக்கும்
எதுவுந்தெரியாமல்
சாடைமாடையாய்
பரிகாசம் செய்கிறார்கள்
பேசுகிறார்கள்
பரிகாசம் எனும்
வன்மொழி
பிரியமான
சிட்டுக் குருவிகளுக்குப்
புரியுமா என்ன?
தொங்கும்
பாலியல் படங்கள்
நாவிதருக்குத் தெரியுமோ?
நாடிவரும்
வாடிக்கையாளரின்
மன இயல்
உளவியல்.
சூன்
2012
No comments:
Post a Comment