*
ஒரு விபத்து
என் பிறப்பு
பின் எனது இருப்பில்
எங்கிருந்து இத்தனை
வெறுப்பு?
சாதி சதி செய்தது
மதம் அப்படித்தான்
என்றது.
பொருளாதாரம் சுரண்டியது
கல்வி குருடாய்
இருக்கச் சொன்னது
இயற்கை தன்னை
.இழந்து தவித்தது
கடவுள் காணக்கிடைக்கவில்லை
அனைத்தும் சந்தை
என்றான பின்
அன்பும் சந்தைக்குச்
சென்றது
விலைபோகாத அன்பு
அநாதையாய் நின்றது
மனிதம் அகதியாய்
ஓடியது
மனம் ஏங்கித் தவித்தது
அன்பை விதைத்தது
அன்பை வளர்த்தது
அன்பைப் பறிமாறி
அன்பின்றி ஏதுமில்லையென
நட்பும் இலக்கியமும்
மட்டுமே
கடைசிப் புகலிடமாய்
காட்சியளித்தது
எனக்குள் உண்டான
வெறுமைக்கு விடைகண்டு
“ ஜெய்பீம் ” என்றேன்
அரசியல் சுருக்கால்
இறுக்கியது
என் பெயர் ரோஹித்
வெமூலா.
*
நன்றி :ஆதாரம்
: உயிர்மை – பிப்ரவரி - 2016 இதழ் – பக்கம் 17.
தகவல் : ந.க.துறைவன்.
*
No comments:
Post a Comment