எத்தனை
மகான்கள்? எத்தனை அறிஞர்கள்? எத்தனையோ அறநூல்களில் நேர்மையாக வாழ்ந்திட அறநெறிகள் போதித்தப்
போதிலும், நல்ல தீயன நடப்பவைகள் நடந்துக் கொண்டுதானே இருக்கின்றன. மக்களின் மனமாற்றத்திற்கான
எவ்வளவோ சிறந்தக் கருத்துக்களை யார் சொன்னாலும், அதை ஏற்று நடக்கின்ற மனப்பக்குவம்
எத்தனைப் பேர் இதயங்களைத் தொட்டிருக்கிறது. படிப்பதற்கு, பார்ப்பதற்கு, கேட்பதற்கு
இருக்கின்ற ஆர்வம் அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் இல்லை என்பதே உண்மையாக இருக்கின்றது.
சத்தியம் எப்பொழுதும் வாழ்கிறது. அசத்தியம் எப்பொழுதும் வீழ்ச்சியடையவே செய்கிறது.
*
No comments:
Post a Comment