அழகு பஞ்சத்தின்
ஊதுகுழல். சாவு நெருங்கியக் கொண்டிருக்கும் செய்தியின் அறிவிப்பு. இந்தப் பூக்கள் உதிரும்போது
மூங்கில் விதைகளும் உதிர்கின்றன. மூங்கில் விதைகள். எலிகளுக்கு மிகவும் பிடிக்கும்.
எலிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. மழையும் சேர்ந்து வருகிறது. மழையில் விதைகள் சில
நாட்களில் செடிகளாக மாறிவிடுகின்றன. விதைகள் கிடைக்காத எலிகள் வயல்களையும் நெற்கிடங்குகளையும்
தேடத் தொடங்குகின்றன. யுத்தம் தொடங்குகிறது.
“ இந்த யுத்தம்
விவசாயிகளுக்கும் எலிகளுக்கும் மத்தியில் நடக்கிறது. தங்களால் முடிந்தவரை தானியங்களைத்
தின்றுவிட்டு எலிகள் கோடிக்கணக்கில் சாகின்றன. இந்த இழப்பை ஈடுகட்ட விவசாயிகள் பல வருடங்கள்
பாடுபட வேண்டியிருக்கி்றது. இப்போது நடப்பது எலிகளில் வருடங்கள். .
ஆதாரம் :-எழுத்தாளர்.
திரு.பி.ஏ.கிருஷ்ணன் – கலங்கிய நதி – நாவல் –பக்கம்.95
தகவல் :- ந.க.துறைவன்.
*
எலிகளோடும் சண்டை ஆளும் அரசுகளோடும் சண்டை....
ReplyDelete