*
தாவணிப்
பறந்தாட
துள்ளித்
துள்ளிப் போறா…
தட்டாம்பூச்சிங்க
அவ கூட
சிறகடித்துப்
பறக்குது.
*
இலந்தம்
பூவைப் போலவே
இளமை
ரொம்ப அழகு
மயில்வண்ணத்
தோகைப்போல
கட்டிய
தாவணி யழகு.
*
ஆலமரம்
விழுதுகள் போல
கருங்கூந்தல்
நீளம்
ஆளானப்
பொண்ணு
அவ
பேருங் கூட நீலம்.
*
தண்ணிக்
குடம் தூக்கிப் போனா
தளும்பவில்லை
மனசு
கண்பார்வை
வீசிப் போனா
காதல்
விழிச்சுடரோ புதுசு.
*
செல்போனில்
பேசிப் போனா
உதடு
சிவந்து தெரியுது
பேசும்
வார்த்தை என்னவென்று
காத்துக்கு
மட்டும் தெரியுது.
*
காத்து
வந்துச் சொன்னா
கட்டிக்க
எனக்கு சம்மதம்
நீலமலர்
அழகில் சொக்கி
நீண்ட
காலம் வாழ்ந்திடுவேன்…!!
*
No comments:
Post a Comment