*
உன்னைப்
பார்த்ததாக
அம்மா வந்துச்
சொன்னாள்
அப்பப்
பார்த்தவளா இல்லை
மெலிந்திருக்கா
சோம்பி
முகம்
தெளிவில்லை எதையோ
பறிகொடுத்தவ
மாதிரியிருக்கா?
மனம்விட்டு
எதையும்
சொல்ல
மறுக்கிறா?
நீ போயி தா
அவகிட்ட
பேசிப்
பாரேன்.
ஊங்கிட்ட
வாச்சும்
கஷ்டத்தைச்
சொல்லி….
நான் போயி
எப்படிம்மா?
அவளிடம்
கேட்பது?
நாளும் குமைந்துக்
கொண்டிருப்பவளிடம்
போய்
எத்தனைப் பேர்
கேட்டாலும்
உள்ளிருப்பதை
வெளியில்
சொல்லுமா வெந்த
மனம்….??
*
No comments:
Post a Comment