தலையை ஆட்டாமல்
யாரேனும்
பேசுவதைக் கேட்பதைப்
பார்த்திக்கிறீர்களா?
பேசுபவரோ கேட்பவரோ
ஒவ்வொருவரும்
வெவ்வேறு மாதிரியாய்
தலையாட்டுவதைப்
பழ[க்]கியுள்ளார்கள்.
தலையை ஆட்டுவது
சிலரின் பேச்சைக் கேட்டு
சரியென்று சம்மதிப்பதற்கோ
தவறு என்று சுட்டுவதற்கோ
மௌனப் பதிலாக
வெளிப்படுத்துகிறார்கள்.
தலையை ஆட்டிக் கொண்டே
ஒருவர் பேசுவதை
இன்னொருவர்
கேட்டுக் கொண்டிருப்பார்
எதற்கு இவர்
தலையாட்டுகிறார் என்றும்
மற்றவர்க்கு எதுவுமே
புரியாது.
பெரிய மனிதர்கள்
சிலரின் தலையாட்டலே
சாதக பாதகங்களினால்
காரியம் சாதிக்கும், சிதைக்கும்
சாமர்த்திய ரகசிய
சங்கேத மொழியாகப்
பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
தலையை, கையை
ஆட்டாமல்
கவிதைப் படித்தால்
அவனுக்கு
சுளுக்கென்றோ
ரோபோ வென்றோ
நினைத்துக் கிண்டல் செய்து
நகைப்பார்கள்.
எல்லோருக்குமே
ரசிக்கும்படியாக இருக்கிறது
வீட்டின் செல்லப் பேரன்
சாருஹாசன்
மழலைப் பேசுவதைத்
தலையை ஆட்டியாட்டி
கேட்டு மகிழ்கிறது
தஞ்சாவூர் பொம்மை….!!
*
No comments:
Post a Comment