இந்தியாவில் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்கவும்
வெளியிடவும் பேச்சுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்ப
சட்டம் பிரிவு 66ஏ மற்றும் அதில் 2009-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி,
சுதந்திரமாக கருத்துகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிறரை எரிச்சலூட்டும் வார்த்தைகள், அச்சுறத்தல்,
ஏளனம், புண்படுத்துதல், பகை உணர்வைத் தூண்டுதல் போன்ற கருத்துக்களை சமூக வலைத்தளங்களில்
வெளியிடுவோரை கைது செய்யலாம் என்று அச்சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு
மூன்று ஆண்டுகள் வரை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும். தற்போது இச்சட்டப்பிரிவு
ரத்து செய்யப்பட்டதையடுத்து, வலைதள கருத்து சுதந்திரம் மீட்கப்பட்டுள்ளது.
ஆதாரம் :- தி இந்து – 25-03-2015.
தகவல்:- ந.க. துறைவன்.
No comments:
Post a Comment