*
விளையாட்டு காட்டுகிறது
பூக்களுக்கு
இரவில் ஒளி சிந்தி
மின்மினிகள்
*
இருளில் எவரை வேவு
பார்க்கின்றன
இரவில் விழித்திருக்கும்
ஆந்தைகள்.
*
காதல் கிளிகளின்
கூடுகளை
எட்டி.ப்பார்க்கின்றன
காக்கைகள்.
*
இரவுமில்லை பகலுமில்லை
நீரில் வாழும்
மீன்களுக்கு…
*
மழை நின்றபின்
இரவெல்லாம்
கொண்டாட்டம் கத்தி
மகிழும தவளைகள்.
*
No comments:
Post a Comment