1.
சீரியஸான விஷயத்தை எளிதாக
எடுத்துக் கொள்கிறார்கள்
ஒன்றுமில்லாத விஷத்தைப்
பெரியதாக்கி விடுகிறார்கள்.
2.
அந்த காக்கா
யார்?
தாத்தாவா? அப்பாவா?
வைத்த படையல் சோறு
சாப்பிடுவார்களா?
இன்று அமாவாசை.
3.
கோடை விடுமுறை
குழந்தைகள்
ஊரிலிருந்து வருகை
கலகலப்பாக இருக்கிறது
வீடு.
4.
புள்ளிகள் இணை
புதிய கோலம் வரும்
எறும்புகள் ரசிக்கட்டும்.
5.
என்னுள்
உன்னைத் தேடு.
ந க துறைவன்.
அனுபவங்கள் பகிர்வு
No comments:
Post a Comment