1.
வெற்றிடம்
வெற்றிடமாக
இருந்தாலே அழகு.
உன் வெற்றிடம் தான்
எனக்கு
பேரழகு.
2.
குளிர்பானம்
கோடை வெயிலுக்கு
அவனுக்கு பிடித்தது
அவன் குடித்தான்
அவளுக்கு பிடித்தது
அவள் குடித்தால்
இருவரின்
சுவையே வேறு வேறு
3.
நீட்
எழுதி முடித்து
கூந்தல் முடிக்காமல்
புதிய திரௌபதிகள்
மௌனமாய்...
கலைந்தனர்.
4.
எல்லாம் கழற்றி விட்டு
எழுத அனுமதிப்பது தான்
தேசிய தேர்வு நீட்.
5.
பூங்காவில் கூடினார்கள்
கவிதை வாசித்தார்கள்
வண்ணத்துப்பூச்சிகள்
கேட்டு பறந்தன அப்பால்...
6.
பூங்கா நிறைய கூட்டம்
தும்பிகள் துறத்தும் விளையாட்டு
சந்தோஷம் இல்லாத
சில முகங்கள்.
7.
எழுது ...அழி
எழுது ...அழி
தலைசீவு
இது
உருவாக்கும்போதே
எழுதப்பட்டப்
பென்சிலின் விதி.
8.
நாசி நுகர்ந்தது
நறுமணம்
அறையெஙகும்
சாம்பிராணி புகை
கொசுக்களுக்கு பகை.
ந க துறைவன்.
குறுங்கவிதைகள்
No comments:
Post a Comment