இரவு
1.
உயிர்களின் உறவுகள்
எத்தனை ரகசியமாய்
உணர்ந்து அனுபவிக்கிறது
அந்தரங்கமாய் இருட்டு.
2.
இளம் சூட்டு புழுக்கம்
இருளில் இரைதேடி நகர்கிறது
வளைந்து நெளிந்து பூரான்.
3.
மன இறுக்கம், அவதி, உலைச்சல் என
அமைதியின்மையால்
நிம்மதி இழக்கும்
மானுடருக்கு
சில மணி நேரம்
விடுதலை
அளிக்கிறது இரவு.
4.
அவள் என்னோடு
அந்தரங்கமாய் பேசி
களிப்பதற்கு
துணை புரிகிறாள்
இரவு தோழி.
5.
இரவை யாரும்
பழித்து பேசுவதில்லை
எல்லாருமே
புகழ்ந்து பேசுகிறார்கள்
புகழ்ச்சியில் தான்
அவள்
மயங்கி நெருங்குகிறாள்
என்னிடம்!
ந க துறைவன்.
இரவு
No comments:
Post a Comment