Labels

April 1st (1) Children's day (1) Good Wishes (1) Haiku (8) mஹைக்கூ (1) photo (2) Quotes (11) Senryu (1) simply (1) Tamil Quotes (1) Tao thought (1) Thought (4) Thoughts (1) Wishes (1) Wonderful World Art (1) அஞ்சலி (1) அஞ்சலி... (14) அரசியல். (1) அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை (1) அருள் உரை. (1) அழகிய ஓவியம் (1) அழகு ஓவியம் (3) அறிமுகம் (13) அறிய தகவல் (1) அன்பு (1) ஆரோக்கியமான உணவு (1) ஆரோக்கியம் (2) இருவரி கவிதை (7) இருவரிக் கவிதைகள் (1) ஈச்சங்குலை (2) உரை (4) உரைநடை (1) உரையாடல் (1) உரைவீச்சு (1) உழவு தொழில் (1) எண்ணங்கள் (1) எண்ணம் (7) ஒரு வரி கவிதை. (2) ஓரு பக்கக் கதைகள் (19) ஓவியக் கவிதை (1) ஓஷோவின் கதை (1) கட்டுரை (26) கட்டுரைகள் (5) கதை (2) கருத்து (26) கலை (1) கவிதை (501) கவிதை வீடியோ (1) கவிதை. (14) கவிதைகள் (20) கவிதைகள். (8) கஜல் (17) காட்சி (1) கார்த்திகை தீபம் விழா (1) கிராமியக் கதை (2) குக்கூ (1) குட்டி கதை (3) குட்டிக் கதை (1) குட்டிக்கதை (4) குரு - சீடன் உரை (1) குறுங்கவிதை (1) குறுங்கவிதை. (8) குறுங்கவிதைகள் (16) கூழாங்கற்கள் (3) கேள்வி - பதில் (3) கொரோனா (1) கொரோனாவுக்கான மருத்துவம் (1) சிந்தனைக்கு... (4) சிறுகதையிலிருந்து... (1) சிறுவர் பாடல் (13) சிறுவர் பாடல். (1) சிறுவர் பாடல்கள் (1) சிறுவர்பாடல் (1) சிற்பக் கலை (1) சுற்றுலா (1) சூஃபி கதை (1) சூபி கதை (1) செய்தி (6) செனரியு (24) சென்ரியு (45) சென்ரியு கவிதைகள் (3) சென்ரியு. (14) சென்ரியூ (99) தகவல் (1) தமிழ்மொழி (2) தன்னம்பிக்கை (1) தியானம் (1) தீபாவளி நல்வாழ்த்துக்கள் (1) துணுக்கு (98) துணுக்குகள் (95) நகைச்சுவை (5) நகைச்சுவை. (5) நடப்பு கவிதை (1) நல்ல நாள் (1) நல்வாக்கு. (1) நல்வாழ்த்துகள் (1) நன்னெறி. (3) நினைவுகள் (1) நீதிநெறி (2) படம் (73) பயம் (1) பரிசு போட்டி (1) பரேகு ஹைக்கூ (4) பல் டாக்டர் (1) பழமொழி (2) பழைய நினைவுகள் (1) பாடல் (3) புதுக்கவிதை (234) புத்தர் மேற்கோள் (1) புத்தாண்டு வாழ்த்துக்கள் (1) பெண் (1) பொங்கல் வாழ்த்து (1) பொது அறிவு (13) மரபு (18) மருத்துவம் (1) மினி கதை (1) மினி கவிதை (27) மினி கவிதைகள் (6) முட்டாள்கள் தினம் (1) முல்லா கதை (12) முல்லா கதைகள் (1) மேற்கோள் (29) மைக்ரோ கதை (10) ரமணர் வாக்கு. (1) லிமரைக்கூ (22) வசனம் (1) வணக்கம் (1) வாழ்த்து. (4) வாழ்த்துகள் (1) வாழ்த்துக்கள் (51) விமர்சனம் (2) வேலூர் மலைக் கோட்டை (1) ஜென் (2) ஜென் கதை (18) ஹைக்கூ (404) ஹைக்கூ கவிதை (22) ஹைக்கூ கவிதைகள் (25) ஹைக்கூ கவிதைகள். (3) ஹைக்கூ. (73) ஹைபுன் (51) ஹைபுன் கவிதைகள் (2)

Thursday, 31 May 2018

வாழ்த்துக்கள்

இன்று
சர்வதேச குழந்தைகள் தினம்

நல்வாழ்த்துக்கள்.

ந க துறைவன்.


குழந்தைகள் தினம்


Tuesday, 29 May 2018

இக்கணம்

இக்கணம் ஏதோவொரு
இலக்கோடு
பலகாததூரம் சலிப்பின்றி
அப்பறவை
பயணிக்கிறது ஒரு திசையில்.

ந க துறைவன்.


சலிப்பற்ற பயணம்


Saturday, 26 May 2018

நகைச்சுவை

அரசியல் நகைச்சுவை


உப்பு

உப்பு நிறம்மாறி கரித்தது
உயிர்கள் இழந்து வீடுகளில் சோகம்
குருதியில் உறைந்தது மண்.

ந க துறைவன்.


நிறம் மாறிய உப்பு


Wednesday, 23 May 2018

முத்துக்கள்

சூரியன் சிவந்தான்
கடல்நீர் பிரதிபலித்தது
முத்துகள் ரத்தநிறம்.

He was the Sun Red
Seawater is reflected
Blood coloured pearls.

Thuraivan NG


வெண்முத்து நிறம் மாறல்


Tuesday, 22 May 2018

அஞ்சலி

தூத்துக்குடி
போராட்டத்தில்
உயிரிழந்தவர்களுக்கு
எனது ஆழ்ந்த அஞ்சலி.

ந க துறைவன்.


தூத்துக்குடி போராட்டம்


Monday, 21 May 2018

வேம்பு

நேற்று பெய்த மழைக்காற்று
முறித்து வீழ்த்தியது நொடியில்
அனலை விசிறி நின்ற
வேம்பு மரத்தை...

ந க துறைவன்.


காற்று மழை


நிரப்பு

எதாவது எழுத எண்ணம்
எதை எழுதுவது?
எதையாவது எழுதி நிரப்பு.

ந க துறைவன்.


எதை எழுத...


Sunday, 20 May 2018

அவளின் அதிகாரம்

அவளின் அதிகாரம் உச்சம்
யாரும் தலையிட மறுப்பு
அகங்காரம் தொனி ஆயுள்வரை.

ந க துறைவன்.


மன இயல்பு


Saturday, 19 May 2018

கற்பனையே...!!

" அனைத்துங் கற்பனையே; ஆத்மாவோ கட்டற்ற பழம்பொருள்" என்றுணர்ந்த தீரன் சிறுவனைப்போல் என்ன பழகுவது?

அஷ்டாவக்ர கீதை.


அஷ்டாவக்ர கீதை உரை


என்ன மனிதன் இவன்?

மனித இயல்புகள்


Thursday, 17 May 2018

கண்களில்...

கண் பார்வையால்
எதையோ தேடுகிறாய்?
எதுவென்று புலப்படவில்லை
உன்னுள் நிறைந்த மௌனமோ
எதையென்று
வெளிப்படுத்தி உணர்த்த
மறுக்கிறது.
கடலின் ஆழமிக்கது
உனது
புதிர் மனம்

ந க துறைவன்.


பார்வை வீசி...


Monday, 14 May 2018

புள்ளிகள் இணை...!!

1.
சீரியஸான விஷயத்தை எளிதாக
எடுத்துக் கொள்கிறார்கள்
ஒன்றுமில்லாத விஷத்தைப்
பெரியதாக்கி விடுகிறார்கள்.
2.
அந்த காக்கா
யார்?
தாத்தாவா? அப்பாவா?
வைத்த படையல் சோறு
சாப்பிடுவார்களா?
இன்று அமாவாசை.
3.
கோடை விடுமுறை
குழந்தைகள்
ஊரிலிருந்து வருகை
கலகலப்பாக இருக்கிறது
வீடு.
4.
புள்ளிகள் இணை
புதிய கோலம் வரும்
எறும்புகள் ரசிக்கட்டும்.
5.
என்னுள்
உன்னைத் தேடு.

ந க துறைவன்.


அனுபவங்கள் பகிர்வு


Friday, 11 May 2018

கருணை

எல்லையற்ற கருணை மனம்
எந்த மரமும் நிராகரிப்பதில்லை
பறவைகள் அமர்ந்து ஒய்வெடுப்பதற்கு.

ந.க துறைவன்.


பறவைகள் ஓய்வு


வெற்றிடம்

1.
வெற்றிடம்
வெற்றிடமாக
இருந்தாலே அழகு.
உன் வெற்றிடம் தான்
எனக்கு
பேரழகு.
2.
குளிர்பானம்
கோடை வெயிலுக்கு
அவனுக்கு பிடித்தது
அவன் குடித்தான்
அவளுக்கு பிடித்தது
அவள் குடித்தால்
இருவரின்
சுவையே வேறு வேறு
3.
நீட்
எழுதி முடித்து
கூந்தல் முடிக்காமல்
புதிய திரௌபதிகள்
மௌனமாய்...
கலைந்தனர்.
4.
எல்லாம் கழற்றி விட்டு
எழுத அனுமதிப்பது தான்
தேசிய தேர்வு நீட்.
5.
பூங்காவில் கூடினார்கள்
கவிதை வாசித்தார்கள்
வண்ணத்துப்பூச்சிகள்
கேட்டு பறந்தன அப்பால்...
6.
பூங்கா நிறைய கூட்டம்
தும்பிகள் துறத்தும் விளையாட்டு
சந்தோஷம் இல்லாத
சில முகங்கள்.
7.
எழுது ...அழி
எழுது ...அழி
தலைசீவு
இது
உருவாக்கும்போதே
எழுதப்பட்டப்
பென்சிலின் விதி.
8.
நாசி நுகர்ந்தது
நறுமணம்
அறையெஙகும்
சாம்பிராணி புகை
கொசுக்களுக்கு பகை.

ந க துறைவன்.




குறுங்கவிதைகள்


Thursday, 10 May 2018

குலதெய்வம்

புதர்கள் அடர்ந்த வனப்பகுதி
ஊர்எல்லைக்கு வெளியே
காவல் இருக்கிறாள் குலதெய்வம்.

ந க துறைவன்.


காவல் காக்கிறாள்


Sunday, 6 May 2018

சொல்வதெல்லாம்..!!

1.
சொல்வதெல்லாம்
புரிந்து விட்டால்
சிரமம் இல்லை
சொல்வதெல்லாம்
புரிந்ததென்றும்
சொல்வதற்கிலலை.
2.
சொல்வது எல்லாமே
புரிந்து விடும்
சொல்வதைப் பொறுத்து.
3.
கார்டுகளிலே தான்
காலம் தள்ளுகிறோம்
இனி
கார்டுகளே கைடுகள்.
4.
யாருடைய பிரச்சனையோ
சலிக்காமல் பேசினர்
என்னருகில்
பரிச்சயமற்ற நபர்கள்.
5.
மக்களை நிராகரிப்பவர்கள்
மக்கள் நிராகரிப்பார்கள்.
6.
வெயிலுக்கு
குளிச்சியாய்
எழுதினான்
நுங்கு கவிதை.

ந க துறைவன்.


புரிதல்


Wednesday, 2 May 2018

இரவு

இரவு

1.
உயிர்களின் உறவுகள்
எத்தனை ரகசியமாய்
உணர்ந்து அனுபவிக்கிறது
அந்தரங்கமாய் இருட்டு.
2.
இளம் சூட்டு புழுக்கம்
இருளில் இரைதேடி நகர்கிறது
வளைந்து நெளிந்து பூரான்.
3.
மன இறுக்கம், அவதி, உலைச்சல் என
அமைதியின்மையால்
நிம்மதி இழக்கும்
மானுடருக்கு
சில மணி நேரம்
விடுதலை
அளிக்கிறது இரவு.
4.
அவள் என்னோடு
அந்தரங்கமாய் பேசி
களிப்பதற்கு
துணை புரிகிறாள்
இரவு தோழி.
5.
இரவை யாரும்
பழித்து பேசுவதில்லை
எல்லாருமே
புகழ்ந்து பேசுகிறார்கள்
புகழ்ச்சியில் தான்
அவள்
மயங்கி நெருங்குகிறாள்
என்னிடம்!

ந க துறைவன்.


இரவு