*
சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று
சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.
*
சொல்வது யாருக்கும் எளிது
சொல்லாமல் இருப்பதுதான் கடினம்.
*
படபடவென்று பேசுவோர்கள்
பயன்படுத்துவர் பயனற்ற பலசொல்.
*
சொல்பேச்சை யாரும் கேட்கவில்லை
என்று
சொல்லிக் குறைபடுவர் பெற்றோர்.
*
உபயோகமான சொல் அன்பு வளர்க்கும்
உதவாதச் சொல் உபத்திரம் தரும்.
*
No comments:
Post a Comment