*
நான் இறந்த பிறகு
எனது கல்லறையைத் திறந்தால்
அங்கே ஒரு புகை
மண்டலம் கிளம்புவதைக் காண்பீர்கள்.
அந்தப் புகை
இறந்து போன என்
இதயத்திலிருந்து எரியும்
நெருப்பினால் உண்டானது.
ஆம்
அது என்றுமே அழியாத
என்
உயிரின் சுடர்
*
நான் இறந்த ஒரு
நூறு
ஆண்டுகள் ஆகிவிட்ட
போதிலும்
அவளுடைய கூந்தலின்
மணம்
என்னுடைய சமாதியைக்
கடந்து சென்றால்
உளுந்துப் போன
எலும்புகளிலிருந்து
உயிர்த்தெழுந்து
நடனமிடுவேன்.
*
காதலையும் தர்க்கத்தையும்
ஒப்பிட்டுப் பார்த்தேன்
சமுத்திரத்தில்
வீழும்
ஒரு மழைத்துளிதான்
தர்க்கம்.
*
மேற்கண்ட பாடல்கள்
க்வாஜா ஷம்சுத்தீன் ஹஃபீஸ் [ 1326 – 1390 ] என்ற பெர்ஷிய கஸல் கவிஞர் பாடியவை. கஸல்
இசையின் பிதாமகர்களில் ஒருவரான ஹஃபீஸின் பாடல்களை தா-ஸாஸ் குழுவினர் பாடியிருக்கின்றனர்.
ஆதாரம் :- “ கடவுளும்
நானும் ” – சாரு நிவேதிதா – வின் நூல். பக்கம் – 56.
*
No comments:
Post a Comment