புரிஞ்சிதா, புரிஞ்சிதா என்று
வார்த்தைக்கு வார்த்தை பேசி
புரிய வைக்க முயன்றவர் பேச்சு
கொஞ்சம் குழப்பமாகவே
புரியாமல் போனது அவனுக்கு
அப்புறம் தான் புரிந்தது
அவர் புரியும்படி
சொன்ன விளக்கம் இப்பொழுது...
+
சிலர் சுற்றி வளைத்து
பேசி புரிய வைப்பார்கள்
சிலர் நேரடியாக பேசி
புரிய வைப்பார்கள்
சிலர் பேசாமலேயே
செயல்வழி புரிய வைப்பார்கள்
புரிய வைப்பதை எத்தனையோ
வழிகளில் புரிய வைக்கலாம்
அதில் எது
புரிந்துக் கொள்ளத்தக்கதோ?
அதுவே புரிந்து கொள்ள இயலும்
அக்கணத்தில்...
ந க துறைவன்.
புறிதல்
No comments:
Post a Comment