மௌனம்
1.
மௌனமாய் இயங்குகிறது
பிரபஞ்சம்
வெளி தான்
ஆர்ப்பரிக்கிறது
இரைச்சலாய் எந்நேரமும்...
2.
நான்
மனமற்று கம்பீரமாய்
மௌனம்
அனுஷ்டிக்கிறது
அழகான பூக்கள்.
3.
இளநீர்க்குள்
நிரம்பி இருக்கிறது
தென்னையின்
ஆழ்ந்த மௌனம்.
4.
மொழி அற்ற
மொழியே
மௌனம்.
5.
நடைபயிற்சி போது
செம்பருத்தி பூ
தரிசனம்
உபதேசித்தது
உள்மௌனம்.
ந க துறைவன்.
Apr 26, 2018 9:36:35 AM
மௌனமாய்...
No comments:
Post a Comment