ஆண்டாள் பாவம்
ஒரு மூச்சு
அழுது தீர்த்து விட்டாள்
இந்த
மார்கழி மாதம்
பேச்செல்லாம் கொச்சை
ஊரெல்லாம் சர்ச்சை
முடிவில்லா போக்கில்
பண்பாட்டு கட்டுடைப்பு
ஆன்மீகம் என்பது
வன்மீகம் என
உருமாறி வருகிறது
கவலை
கடவுளுக்கில்லலை
மனிதர்களுக்கு
மட்டுமேயானது
கடந்து போவதற்கு
மனம்
சிறகு விரிக்க வேண்டும்.
சிறகு ஒடிந்தால் பறவைகள்
என்ன செய்யும்?
ந க துறைவன்.
திசை மாறும் பறவைகள்
No comments:
Post a Comment