கயாவின் ஆலமரம்.
கயாவின் ஆலமரம் அப்போதும் அசையாமல் நின்று கொண்டிருந்தது. சித்தார்த்தன் ஓரிரு கணம் ஆலமரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
" நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள் எனக்குப் புகலிடம் தந்த அன்னையே!"
அவன் அழுதான், " இன்று நீ எனக்கு வேண்டாம். நான் தேர்ந்தெடுத்த பாதை சரியில்லை. மனிதன் இன்னும் துயரில் உழன்று கொண்டிருக்கிறான்."
பின்னர் சித்தார்த்தன் தோளிலிருந்த கோடாரியை எடுத்து கயாவின் ஆலமரத்தின் அடிப்பகுதியை வெட்டத் தொடங்கினான்.
ஆதாரம்: யாழ்ப்பாணம் புகையிலை - காக்கநாடன் நாவல். தமிழில்: நிர்மால்யா. பக்கம்: 112.
தகவல்: ந க துறைவன்.
புத்தர் நினைவாக...
No comments:
Post a Comment