தெருக் கூத்துப் பர்த்து
மெய்சிலிர்த்து
பொழுதுபோக்கி வாழ்ந்தார்
என் தாத்தா
வானொலிப்
பெட்டிவாங்கி
பாட்டுக்கேட்டார்
என் அப்பா
கலர் டி.வி
பெட்டி வாங்கி
படம்பார்க்கிறேன்
நான்
மடிக்கணினி
வாங்கிப்பலதைப்
படிக்கிறான்
என் மகன்
கைபேசி
இன்டெர்நெட்டில்
உலக நடப்பை
அறிகிறான்
என் பேரன்
நாளை...
என்ன கருவி
புதியதாய் இருக்கும் -என்
கொள்ளுபேரன்
கைகளில்...
No comments:
Post a Comment