தமிழ் நாட்டின்
பழம் பெரும் கோவில் ஒன்றினுள் நுழைந்தார்கள். அங்குள்ள கற்றூண்களில், கற்சுவர்களில் இருக்கும்
புரிந்தும் புரியாததுமான பழந்தமிழ்க்
கல்வெட்டுகள், தேவநாகரி எழுத்துக்கள், அழகழகான கற்சிற்பங்கள், சிரிக்கும் கோமாளி
பொம்மைகள், உக்கிரமான கோர ரூப உருவங்கள், பெரிய பெரிய யாழி, யானைகளின் விரைப்பான
தோற்றங்கள், கவர்ச்சியான பெண் தேவதைகளின் அரை
நிர்வாண சிலைகள், கோரை பல் நீண்டு கம்பீரமாக நிற்கும் வாயிற் காவல்
தெய்வங்கள் எல்லாம் கண் குளிரப் பார்த்து ரசித்து சிற்பிகளின் கலை நுட்ப அறிவை
வியந்த வண்ணம் நடந்தனர்.
மூலவருக்குத் தெரியுமா?
தனக்காக சேர்த்துவைத்திருக்கும்
சொத்தின் மதிப்பு!
No comments:
Post a Comment