பலி
ஹைக்கூ கவிதைகள் ஃ
1.
குலதெய்வம் வழிபாடு
மண்ணில் உறைந்திருக்கிறது
பலி ஆட்டின் இரத்தம்.
2.
மழையில் நனையாமல்
நிலையாய் மூடிய தேர்
பகலில் நகர்கிறது நிழல்.
3.
மண் குடிசை
வசிப்பது சொந்த கூடு
பனைமர சாளரத்தில் குளவி.
4.
மரங்கள் அற்ற நெடுஞ்சாலை
வண்ணக் கொடிகள் பறக்கின்றன
வீட்டுமனை விளம்பரங்கள்.
5.
பழுத்த கொய்யா பழம்
குருவிகள் கொத்தி தின்றன
பசியால் அணில் குஞ்சுகள்.
ந க துறைவன் வேலூர்
No comments:
Post a Comment