தரிசனம்
காற்றில் உருண்டு வந்தன
சருகு இலைகள்
மெதுவாக நின்றன
தியான புத்தனின்
பாதம் அருகில்
வலம் வந்தன எறும்புகள்
வேறு இடம் தேடி செல்கின்றன
யாருமற்ற ஏகாந்த வெளியில்
புத்தனைக் காண எவருமில்லை
புத்தனுக்கும் கவலையில்லை
புத்தரைத் தினமும்
தரிசனம் செய்தபடியே
பகலில் கதிரவன்
இரவில் நிலா...!!
ந க துறைவன் வேலூர்.
No comments:
Post a Comment