கவிதை
கடல் அலைகள்
அழகைப் பார்க்கும் நீ
என் மன அலைகளின்
வேட்கை கொஞ்சம் கவனி
உப்பு காற்றின் ஸ்பரிசம்
உடல் தழுவி செல்கின்றன
உன் கவனம் கடல் மீதிருந்தாலும்
உன் அருகில் இருக்கும்
என்னைக் கவனி
ஐஸ்கிரீம் தின்னும் ருசியில்
என்னை மறந்து விடாதே
என் ருசிக்கும் கொஞ்சம்
உன் உதடுகள் கொடு
சுவை
எப்படியிருக்கிறதென்று சொல்கிறேன்
ருசிக்காக படைக்கப்பட்டது தானே
காதல்.
ந க துறைவன்.
No comments:
Post a Comment