*
பேசிக் கொண்டிருந்தவர்கள்
பேசுவதை நிறுத்திக்
கொண்டார்கள்.
பேசாமலிருந்தவர்கள்
மெல்ல
பேசத் துவங்கினார்கள்.
இப்பொழுது தான்
அவர்களுக்கு
எந்தப் பூ என்ன
மணமென்று
புரிந்துக் கொள்ள
கால அவகாசம்
வாய்ந்திருக்கிறதோ?
*
பொன் கிடைத்தாலும்
புதன் கிடைக்காது
என்கிறார்கள்
பெண் கிடைத்தாலும்
இப்பொழுது
கல்யாணமண்டபம்
கிடைப்பதில்லை.
*
No comments:
Post a Comment