*
N.G. THURAIVAN'S HAIBUN.
*
இடுப்பில் இருக்கும்
குழந்தை, அம்மாவின் மாராப்புத் துணியை இழுத்து
இழுத்து எதையோ சொல்ல விரும்புகிறது. அதைக் கவனிக்காமல், அப்படியென்ன தான் அடுத்த வீட்டம்மாளிடம்
அவசரமானப் பேச்சோ? தெரியவில்லை. குழந்தையின் நச்சரிப்புத் தாங்காமல் “ என்னடா, சொல்லித்
தொலையேன்? என்றாள் தாய். குழந்தைக் சுட்டிக் காட்டியப் பக்கம் பார்த்தாள்.
வீட்டுவாசற்படியில்
எலியைப் பிடித்துக் குதறிக் கொண்டிருந்ததுப் பூனை. பதட்டமாய் பதறினாள் தாய்.
புரிய வைத்தது
குழந்தை
பக்கத்து
வீட்டார் உறவு
எலியும் பூனையும்
சண்டை.
*
No comments:
Post a Comment