1.
விருந்தினர் சாப்பிட்ட இனிப்பு காரம் டீ
அவர்கள் வார்த்தைகளோடு
மீதம் இருந்தது தட்டில்.
2.
கைத்தட்டல் பாட்டு சிரிப்பு
திரும்பி பார்த்தனர்
டீக்கடை வாசலில் திருநங்கைகள்.
3.
நகரில் கலவரம்
தீ வைப்பு
சாம்பலானது டீக்கடை.
4.
உடலில் ரத்த வியர்வை
கழைக்கூத்தாடி களைப்பு
கேட்டான் டீக்கடையில் யாசகம்.
5.
கற்பு காதல் காமம்
பால் சர்க்கரை டீத்தூள்
முச்சுவை கலந்ததே நம் காதல்.
ந க துறைவன் வேலூர்.
No comments:
Post a Comment