ஆசையை நான் விட்டாலும்
ஆசை என்னை விடமாட்டேன் என்கிறது.
2.
ஆசையைப் பூர்த்தி செய்துக் கொள்வதற்கும்
மற்றொரு ஆசை தேவைபடுகிறது.
3.
வீரியமற்றவனுக்கு
வீராப்பு அதிகம்.
4.
நினைத்தபோது நிறைவேறாதது
நினைக்காதபோது நிறைவேறியது.
5.
சிகரெட் கையில் வைத்துக்கொண்டு
அடுத்தவரிடம் தீப்பெட்டி கேட்கிறான்.
6.
முன் சாமத்தில்
விழித்தெழுகிறது காமம்.
7.
தூற்றுவார்கள் மேல்
தூற்றுகிறது மாமழை.
8.
புகைப் பனி
உடலுக்கு பகைப்பனி.
9.
மறக்க முடியாததும் காதல்
மறக்கக் கூடியதும் காதல்.
10.
சோகங்களுக்குள் மறைந்திருக்கிறது
சொந்தமான புன்சிரிப்பு.
ந க துறைவன்.
No comments:
Post a Comment