வழிகாட்டி
1.
ஊர் எல்லையில் மக்களைக் காத்து
குலதெய்வமாய் வீற்றிருக்கிறாள்
கூரையற்று தீப்பாஞ்ச அம்மன்.
2.
மகள் திருமணத் தாலி
பூசையில் வைத்து வணங்கினாள்
குலதெய்வம் உத்தரவு கேட்டு...
3.
எல்லையம்மன் உக்கிர உருவம்
இளமையில் பார்த்து பயந்தது
இன்றவள் குலதெய்வ வழிகாட்டி.
4.
காத்து கருப்பு அண்டாமல் காக்க
கன்னிமார்களுக்கு மாவிளக்கு ஏற்றினாள்
நோயால் குழந்தை பலி கொடுத்த தாய்.
ந க துறைவன்.
No comments:
Post a Comment